செய்திகள்
சாத்தான்குளம் வழக்கில் அடுத்த கட்டம்: காவல்நிலையத்திற்கு 3 பேரையும் அழைத்து சென்றது சிபிஐ
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் காவலில் எடுத்துள்ள 3 பேரையும் சம்பவம் நடைபெற்ற காவல்நிலையத்திற்கு சிபிஐ அழைத்து சென்றது.
மதுரை:
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ காவலுக்கு செல்ல காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக காவலர்கள் 3 பேரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிபிஐ அழைத்து சென்றனர்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ காவலுக்கு செல்ல காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக காவலர்கள் 3 பேரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிபிஐ அழைத்து சென்றனர்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.