செய்திகள்
கைது

பொள்ளாச்சி அருகே சூதாடிய 9 பேர் கைது

Published On 2020-07-20 14:18 GMT   |   Update On 2020-07-20 14:18 GMT
பொள்ளாச்சி அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில்,நேற்று முன்தினம் போலீஸ் குழுவினர் எஸ்.நல்லூரில் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது, அங்குள்ள தோட்டத்தில் சின்னுசாமி அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், செந்தில்குமார் உள்பட 9 பேர் கொண்ட கும்பல் சூதாடியது தெரியவந்தது. இதனை கண்டபோலீசார் அவர்கள் தப்பி ஓடாமல் சுற்றிவளைத்துகைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News