செய்திகள்
கூட்டாத்துப்பட்டி பகுதியில் மது விற்ற 2 பேர் கைது
கூட்டாத்துப்பட்டி பகுதியில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தியாப்பட்டணம்:
கொரோனா பரவலை தடுக்க நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த கூட்டாத்துப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ராமநாதன் (வயது 57), நல்லதம்பி (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொரோனா பரவலை தடுக்க நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையிலான போலீசார் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த கூட்டாத்துப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ராமநாதன் (வயது 57), நல்லதம்பி (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.