செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சர் முக்கிய ஆலோசனை

Published On 2020-07-20 04:04 GMT   |   Update On 2020-07-20 04:04 GMT
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:

கொரோனாவின் தாக்குதலை அடுத்து தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் 80 சதவீதம் மற்றும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பள்ளிகல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சர், மதிப்பெண்களை காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் வழங்கலாமா அல்லது கிரேடு முறை அளிக்கலாமா என முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். 
Tags:    

Similar News