செய்திகள்
கொரோனா விவகாரம்- மு.க.ஸ்டாலின் மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
கொரோனா விவகாரத்தில் நித்தம் நித்தம் உண்மைக்கு புறம்பான செய்தியை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பதாவது:
கொரோனா விவகாரத்தில் நித்தம் நித்தம் உண்மைக்கு புறம்பான செய்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அவர் ஜீவகாருண்யம், நேர்மையை போதிக்க வேண்டியது திமுகவினருக்கு தான்.
தமிழக காவல்துறை அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது உள்நோக்கம் கொண்டது. அரசியல் பகையை முன்வைத்து திமுகவினர் ஆடிவரும் ருத்ர தாண்டவங்களை அடக்க முடியாதவர் திமுக தலைவர்.
உண்மைக்கு புறம்பான செய்தியை தினமும் வெளியிட்டு மக்கள் மனதில் நஞ்சை புகுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பதாவது:
கொரோனா விவகாரத்தில் நித்தம் நித்தம் உண்மைக்கு புறம்பான செய்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அவர் ஜீவகாருண்யம், நேர்மையை போதிக்க வேண்டியது திமுகவினருக்கு தான்.
தமிழக காவல்துறை அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது உள்நோக்கம் கொண்டது. அரசியல் பகையை முன்வைத்து திமுகவினர் ஆடிவரும் ருத்ர தாண்டவங்களை அடக்க முடியாதவர் திமுக தலைவர்.
உண்மைக்கு புறம்பான செய்தியை தினமும் வெளியிட்டு மக்கள் மனதில் நஞ்சை புகுத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.