செய்திகள்
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் ரூ.182 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ.182 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் நேற்று மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ. 182 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் ரூ.42 கோடிக்கும், திருச்சியில் ரூ.41 கோடிக்கும், சேலத்தில் ரூ.40 கோடிக்கும், கோவையில் ரூ.37 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. குறைந்த பட்சமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை அன்று ரூ.171 கோடிக்கு மதுவிற்பனையான நிலையில் நேற்று ரூ.182 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் நேற்று மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று மட்டும் ரூ. 182 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் ரூ.42 கோடிக்கும், திருச்சியில் ரூ.41 கோடிக்கும், சேலத்தில் ரூ.40 கோடிக்கும், கோவையில் ரூ.37 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. குறைந்த பட்சமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை அன்று ரூ.171 கோடிக்கு மதுவிற்பனையான நிலையில் நேற்று ரூ.182 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.