செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2020-07-18 08:37 GMT   |   Update On 2020-07-18 08:37 GMT
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று  வீசக்கூடும் என்பதால் வரும் 22ஆம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும்,  ஜூலை 20, 21 தேதிகளில் தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Tags:    

Similar News