செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2020-07-17 09:00 GMT   |   Update On 2020-07-17 09:00 GMT
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-

தென்மேற்கு பருவக்காற்றில் ஏற்பட்டுள்ள திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் வடக்கு அரபிக்கடல் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

மேலும் வருகிற 22-ஆம் தேதி வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News