செய்திகள்
கலவையில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு
கலவையில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
கலவையில் உள்ள மேலாண்டைபேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் காதர்பாஷா (வயது 35). இவர், நேற்று ஆற்காடு ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அருகில் உள்ள பம்புசெட்டிற்கு செல்லும் மின்வயர் காதர்பாஷா மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காதர்பாஷா இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவையில் உள்ள மேலாண்டைபேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் காதர்பாஷா (வயது 35). இவர், நேற்று ஆற்காடு ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அருகில் உள்ள பம்புசெட்டிற்கு செல்லும் மின்வயர் காதர்பாஷா மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே காதர்பாஷா இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.