செய்திகள்
கொலை

சாத்தான்குளம் அருகே 9 வயது சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

Published On 2020-07-17 03:46 GMT   |   Update On 2020-07-17 03:46 GMT
சாத்தான்குளம் அருகே 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்றும் கழுத்து இறுக்கப்பட்டதில் உயிரிழந்ததாகவும் உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை கிராமம். இங்குள்ள ஓடை பாலம் அருகே சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமி கழுத்து, உதடுகளில் காயங்களுடன் பிணமாக கிடந்தாள். அவள் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சாத்தான்குளம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தது அதேபகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி என்று தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக இந்திரா நகரைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (வயது 19). இவரது நண்பர் நித்தீஸ்வரன் (19).ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 9 வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்றும் கழுத்து இறுக்கப்பட்டதில் உயிரிழந்ததாகவும் உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News