செய்திகள்
கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை ரெயில்நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:
ரெயில்வே துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை ரெயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கனகராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் பொருளாளர் சந்திரசேகர் மற்றும் அர்ஜூன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.