செய்திகள்
அமைச்சர் நிலோபர் கபில்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-16 14:57 GMT   |   Update On 2020-07-16 14:57 GMT
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.   கொரோனா தொற்று ஏற்பட்ட அமைச்சர் நிலோபர் கபில் நேற்று முன்தினம் அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிரின்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அமைச்சர் நிலோபர் கபில் மகன், மருமகனுக்க தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News