செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கொரோனா தடுப்பு பணிக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு?- ஐகோர்ட் கேள்வி

Published On 2020-07-16 09:00 GMT   |   Update On 2020-07-16 09:00 GMT
கொரோனா தடுப்பு பணிக்கு முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரத்தில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்த விவரம் வருமாறு:-

கொரோனா தடுப்பு பணிக்கு நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது?  அதில் யார், யார் எவ்வளவு தொகை கொடுத்தார்கள்? எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது? என்ற முழு விவரத்தை அடுத்த 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News