செய்திகள்
மருத்துவ முகாம்

வேலாயுதம்பாளையம் அருகே சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2020-07-15 11:57 GMT   |   Update On 2020-07-15 11:57 GMT
தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் வேலாயுதம்பாளையம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்:

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் வேலாயுதம்பாளையம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை புன்செய் புகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தொடங்கி வைத்தார். வாங்கல் வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவர் சுதாமதி பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 85 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவும் பரிசோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News