செய்திகள்
பெண் தற்கொலை

சாத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2020-07-15 11:07 GMT   |   Update On 2020-07-15 11:07 GMT
சாத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 52). இவர் கணவரை பிரிந்து சுமார் 35 ஆண்டுகளாக தனது தாய் முத்தம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் முத்தம்மாள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் வசித்து வந்த முத்துக்குட்டி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News