செய்திகள்
சாத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
சாத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 52). இவர் கணவரை பிரிந்து சுமார் 35 ஆண்டுகளாக தனது தாய் முத்தம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் முத்தம்மாள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் வசித்து வந்த முத்துக்குட்டி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 52). இவர் கணவரை பிரிந்து சுமார் 35 ஆண்டுகளாக தனது தாய் முத்தம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் முத்தம்மாள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனிமையில் வசித்து வந்த முத்துக்குட்டி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.