செய்திகள்
செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

கிருஷ்ணகிரியில் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-15 10:26 GMT   |   Update On 2020-07-15 10:26 GMT
கிருஷ்ணகிரியில் முறைப்படி நோட்டீஸ் வழங்காமல், கூரைகளை அகற்றி, கடைகளை சேதப்படுத்தியதாக நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உள்ள கடைகளின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த கூரைகள், தடுப்புகள் போன்றவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினார்கள். இதனால் கூரைகள் அனைத்தும் சேதம் ஆனது. இது குறித்து நேற்று காலை தகவல் அறிந்த கடைக்காரர்கள், வணிகர்கள் அனைவரும் அந்த பகுதியில் கூடினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் அங்கு சென்றனர். அவர்கள் முறைப்படி நோட்டீஸ் வழங்காமல், கூரைகளை அகற்றி, கடைகளை சேதப்படுத்தியதாக நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர செயலாளர் நவாப், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, கடலரசுமூர்த்தி, அஸ்லாம், திருமலைச்செல்வன், கனல் சுப்பிரமணி, கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News