செய்திகள்
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

அமைச்சர் கே.பி.அன்பழகன் டிஸ்சார்ஜ் ஆனார்

Published On 2020-07-15 09:02 GMT   |   Update On 2020-07-15 09:02 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை:

தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்கள் நலப்பணிகளில் ஈடுபடும் அமைச்சர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு திரும்பினார்.
Tags:    

Similar News