செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 35 பேர் மீது வழக்கு

Published On 2020-07-15 07:26 GMT   |   Update On 2020-07-15 07:26 GMT
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தர்மபுரி:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் விதிமுறைகளை மீறி சென்றவர்கள், ஆட்டோக்கள், கார்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்கள் என பல்வேறு விதிமீறல்கள் ஈடுபட்ட 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News