செய்திகள்
கைது

ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு ‘செக்ஸ்’ தொல்லை - சென்னையில் பயிற்சியாளர் கைது

Published On 2020-07-15 05:43 GMT   |   Update On 2020-07-15 05:43 GMT
ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு ‘செக்ஸ்’ தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னையில் வசிக்கும் தேசிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவர், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ‘நான் பயிற்சியில் ஈடுபட்ட போது தனக்கு பயிற்சி அளித்தவர் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு செக்ஸ் தொல்லை கொடுப்பதாகவும், பலமுறை எச்சரித்த பின்னும் அவர் தொடர்ந்து தொல்லையில் ஈடுபட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். புகார் கொடுத்த வீராங்கனை 14 வயது நிரம்பியவர் என்பதால், ‘போக்சோ‘ சட்டப்பிரிவிலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. தீவிர விசாரணைக்கு பிறகு பயிற்சியாளர் மகேஷ்(வயது 30) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News