செய்திகள்
சென்னை தலைமைச் செயலகம்

மருத்துவ மாணவர் சேர்க்கை - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு

Published On 2020-07-14 13:28 GMT   |   Update On 2020-07-14 13:28 GMT
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கிடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  கொரோனா தொற்று பரவல் சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி சற்று நேரம் முன்னதாக முடிவு பெற்றது.

நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கிடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  மேலும் ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவதால் அவர்கள் பங்கேற்கவில்லை.  மேலும் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் சி.வி.சண்முகம் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.   
Tags:    

Similar News