செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

Published On 2020-07-14 12:32 GMT   |   Update On 2020-07-14 12:32 GMT
மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 5 கிராம் எடையுள்ள மோதிரம், 1000 ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழககுப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News