செய்திகள்
விபத்து பலி

மதுரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

Published On 2020-07-14 12:06 GMT   |   Update On 2020-07-14 12:06 GMT
மதுரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 58).இவர் மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் ராஜபாண்டியன் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜபாண்டியன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News