செய்திகள்
கைது

வெம்பக்கோட்டை அருகே மதுபாட்டில்களை பதுக்கிய 2 பேர் கைது

Published On 2020-07-14 11:41 GMT   |   Update On 2020-07-14 11:41 GMT
வெம்பக்கோட்டை அருகே மதுபாட்டில்களை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி சோதனை மேற்கொண்டார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த முத்து (வயது 43), கார்த்திக் ராஜ் (37) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News