செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

Published On 2020-07-14 11:31 GMT   |   Update On 2020-07-14 11:31 GMT
ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் புதியராஜ் (வயது 13). தர்மாபுரம் தெருவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்துக்கு புதியராஜ் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே புதியராஜ் பரிதாபமாக பலியானான். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News