செய்திகள்
மழை

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Published On 2020-07-14 09:36 GMT   |   Update On 2020-07-14 09:36 GMT
வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:-

வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக குடியாத்தத்தில் 5 செ.மீ., பந்தலூரில் 4 செ.மீ. மழை பதிவானது.

அதிக காற்று வீசும் என்பதால் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News