செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் கொரோனாவுக்கு எஸ்.ஐ. உயிரிழப்பு

Published On 2020-07-14 02:30 GMT   |   Update On 2020-07-14 02:30 GMT
சென்னையில் கொரோனா தொற்று காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ. குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை:

காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக எஸ்.ஐ. குருமூர்த்தி (55) பணியாற்றி வந்தார். மதுராந்தகத்தை சேர்ந்த அவர் சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

அயல்பணியாக மீனம்பாக்கம் காவல்நிலைய ரோந்து பணி பொறுப்பாளராக இருந்தபோது கொரோனா தொற்று உறுதியானது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.ஐ. குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News