செய்திகள்
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை- போலீஸ் விசாரணை

Published On 2020-07-12 14:42 GMT   |   Update On 2020-07-12 14:42 GMT
நாகர்கோவிலில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் கோபாலன். இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சந்திரிகா (வயது 54). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் தூங்கச் சென்றனர். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது சந்திரிகாவை காணவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் சந்திரிகா பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். இதற்கிடையே தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து சந்திரிகா உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். இதையடுத்து போலீசார் சந்திரிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், சந்திரிகா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News