செய்திகள்
கொரோனா வைரஸ்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-07-12 13:13 GMT   |   Update On 2020-07-12 13:13 GMT
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 38-வது வார்டு பாரதி பூங்காவில் நடைபெற்றது.
கோவை:

கோவையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 38-வது வார்டு பாரதி பூங்காவில் நடைபெற்றது. டாஸ்மாக் மண்டல மேலாளர் சாதனை குறள் உள்பட 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தலா ரூ.1000 மதிப்புள்ள நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News