செய்திகள்
முதியவர் பலி

மோகனூரில் ரெயில் மோதி முதியவர் பலி

Published On 2020-07-12 10:27 GMT   |   Update On 2020-07-12 10:27 GMT
மோகனூரில் ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் ரெயில்வே பாதையில் நேற்று காலை தலையில் அடிபட்டு, கால் முறிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி அவர் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இறந்து போனவர் கிராயூரை சேர்ந்த நவலடி (வயது 62) என்பதும் அவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பிணத்தை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா? தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News