செய்திகள்
கைது

மோட்டார் சைக்கிள் திருடிய ஆந்திராவை சேர்ந்தவர் கைது

Published On 2020-07-12 10:04 GMT   |   Update On 2020-07-12 10:04 GMT
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 30). இவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து வடிவேல் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஆனந்தபுரத்தை சேர்ந்த சேக்அசின் பாட்சா (40) மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சேக்அசின் பாட்சாவை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News