செய்திகள்
மின்சார நிறுத்தம்

தொப்பம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-07-12 09:45 GMT   |   Update On 2020-07-12 09:45 GMT
தொப்பம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பழனி:

பழனி அருகே உள்ள வாகரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வாகரை, மரிச்சிலம்பு, பூலாம்பட்டி, திருவாண்டபுரம், அப்பனூத்து, தொப்பம்பட்டி, வேலம்பட்டி, ஆலாவலசு, புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு மற்றும் பூசாரிகவுண்டன் வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News