செய்திகள்
கொரோனா வைரஸ்

பெண் காவலருக்கு கொரோனோ- சேர்ந்தமரம் போலீஸ் நிலையம் மூடப்பட்டது

Published On 2020-07-12 09:37 GMT   |   Update On 2020-07-12 09:37 GMT
சுரண்டை அருகே சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்தில் பெண் காவலருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் நிலையம் முற்றிலும் மூடப்பட்டது.
சுரண்டை:

சுரண்டை அருகே சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்தில் பெண் காவலருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து போலீஸ் நிலையம் முற்றிலும் மூடப்பட்டது. பொதுமக்கள் யாராவது புகார் மனு கொடுக்க வேண்டும் என்றால் போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள அறையில் வைத்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் யாரும் நெருங்காத வண்ணம் கம்புகள் வைத்து அடைக்கப்பட்டது. சேர்ந்தமரம் பஞ்சாயத்து, சுகாதார துறையினர் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் பெண் மருத்துவ பணியாளர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதால் மருத்துவமனை தற்காலிகமாக வருகிற 16-ந் தேதி வரை மூடப்படுகிறது.
Tags:    

Similar News