செய்திகள்
முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

முககவசம் அணியாத 280 பேருக்கு அபராதம்

Published On 2020-07-12 09:13 GMT   |   Update On 2020-07-12 09:13 GMT
திண்டுக்கல் அருகே முககவசம் அணியாத 280 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று திண்டுக்கல்லில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கடைகளில் குவிந்தனர். இதையடுத்து முககவசம் அணியாத நபர்களை பிடித்து அபராதம் விதிக்க மாநகராட்சி அதிகாரிகள் களம் இறங்கினர். அதன்படி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன், ரெங்கராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து நாகல்நகர், கடைவீதி உள்பட நகர் முழுவதும் சோதனை நடத்தினர். இதில் முககவசம் அணியாத பெண்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் உள்பட மொத்தம் 280 பேர் சிக்கினர். இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News