செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

மதுரையில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- அமைச்சர் உதயகுமார்

Published On 2020-07-12 07:35 GMT   |   Update On 2020-07-12 07:35 GMT
மதுரையில் மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் இன்று நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் மதுரையில் மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை விரிவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். 
Tags:    

Similar News