செய்திகள்
மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரையை அடுத்த காணப்பாடி அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியில் வடமதுரை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓடையில் ஒருவர் லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த முனியாண்டி (வயது 34) என்பதும், அவர் அனுமதியின்றி மணல் அள்ளி செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
வடமதுரையை அடுத்த காணப்பாடி அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியில் வடமதுரை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஓடையில் ஒருவர் லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த முனியாண்டி (வயது 34) என்பதும், அவர் அனுமதியின்றி மணல் அள்ளி செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.