செய்திகள்
கொரோனா சிறப்பு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா உதவித்தொகை- கஸ்தூரிவாசு எம்எல்ஏ வழங்கினார்

Published On 2020-07-11 14:26 GMT   |   Update On 2020-07-11 14:26 GMT
வால்பாறை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா சிறப்பு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வால்பாறை:

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து வால்பாறை தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா சிறப்பு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை வழங்கினார். 900 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.9 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில் தாசில்தார் ராஜா, நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, துணை தலைவர் மயில்கணேசன், துணை தாசில்தார் மூர்த்தி, கிராமநிர்வாக அலுவலர் விஜய்அமிர்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News