செய்திகள்
கடைகளுக்கு சீல்

திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு சீல்

Published On 2020-07-11 12:14 GMT   |   Update On 2020-07-11 12:14 GMT
திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு இருக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விதிமுறையை மீறி 4 மளிகை கடைகள் திறந்து செயல்பட்டு வந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளை மூடி காவல்துறையினரின் பாதுகாப்புடன் ‘சீல்’ வைத்தனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதித்து தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். பின்னர் ஒரு நபர் மட்டும் செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News