செய்திகள்
கொரோனா தொற்று- திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் மூடல்
திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 2 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து தாசில்தார் சிவசந்திரன் முன்னிலையில் திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
திருக்கோவிலூர் பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த 2 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து தாசில்தார் சிவசந்திரன் முன்னிலையில் திருக்கோவிலூர் பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.