செய்திகள்
கைது

ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 7 பேர் கைது

Published On 2020-07-10 11:29 GMT   |   Update On 2020-07-10 11:29 GMT
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 87 மதுபாட்டில்களையும், ரூ.2,600 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News