செய்திகள்
தற்கொலை

கள்ளக்காதலன் வீட்டில் பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-07-08 12:47 GMT   |   Update On 2020-07-08 12:47 GMT
கரூரில், கள்ளக்காதலன் வீட்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு என்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் வனிதா(வயது 25). இவருக்கும், அருள்பிரகாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. வனிதா, கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தபோது பிரசாத்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கம் அதிகரித்து, அவர்களிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர், வனிதா வீட்டை விட்டு வெளியேறி தாந்தோணிமலை கருப்பகவுண்டன்புதூர் பகுதியில் பிரசாத்துடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கள்ளக்காதலன் வீட்டில் வனிதா தூக்குப்போட்டு கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்து, அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News