செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- மத்திய அமைச்சர் ஆர்கே சிங்

விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது- முதலமைச்சர் வலியுறுத்தல்

Published On 2020-07-08 08:45 GMT   |   Update On 2020-07-08 08:45 GMT
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
சென்னை:

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ள அமைச்சர் ஆர்.கே.சிங், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் மின்சார திருத்த மசோதாவில் தமிழகத்தின் நிலைப்பாடு, புதிய மின்விநியோக திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் கண்டிப்பாக தொடர வேண்டும். வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்பட வகை செய்ய வேண்டும் என மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.   

இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுவாக மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் வழங்கினார்.
Tags:    

Similar News