செய்திகள்
கடைகளுக்கு சீல்

விதி மீறிய 2 கடைகளுக்கு சீல்

Published On 2020-07-08 08:19 GMT   |   Update On 2020-07-08 08:19 GMT
நத்தம் பஸ்நிலையம் அருகே விதி மீறிய 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நத்தம்:

நத்தம் பஸ்நிலையம் அருகே பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பழக்கடைகளில் சமூக இடைவெளியின்றி, விதிமுறையை பின்பற்றாமல் வியாபாரம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளை போலீசார் பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் நத்தம் பகுதியில் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும், அவ்வாறு பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
Tags:    

Similar News