செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா தொற்று பரவல்- திருப்பத்தூரில் வங்கி மூடல்

Published On 2020-07-07 12:00 GMT   |   Update On 2020-07-07 12:00 GMT
திருப்பத்தூரில் ஒரு வங்கி கிளை மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வங்கியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் ஒரு வங்கி கிளை மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த வங்கியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஏரியா மேலாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று தற்காலிகமாக வங்கி மூடப்பட்டது. மேலும் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூடிவருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சியின் மூலமாக வங்கியை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் திருப்பத்தூர் அச்சுக்கட்டுத் தெருவை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News