செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்

தச்சம்பட்டு அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-07-07 09:57 GMT   |   Update On 2020-07-07 09:57 GMT
தச்சம்பட்டு அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
வாணாபுரம்:

தச்சம்பட்டு அருகேயுள்ள நவம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் அய்யங்கரன் (வயது 32). இவர் வேட்டவலம் அருகே உள்ள நாரையூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது அய்யங்கரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News