செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சுந்தர்ராஜன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published On 2020-07-07 09:44 GMT   |   Update On 2020-07-07 09:44 GMT
தேமுதிக முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நண்பருமான சுந்தர்ராஜன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுந்தரராஜன். தேமுதிகவின் பொருளாளராக பொறுப்பு வகித்த இவர், தேமுதிக சார்பில் 2011ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், அவர் கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுந்தரராஜன் இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் சுந்தர்ராஜன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News