செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகரில் ஒரேநாளில் 237 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-07 08:40 GMT   |   Update On 2020-07-07 08:40 GMT
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக 237 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் விருதுநகரில் ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக 237 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,212 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News