செய்திகள்
கொரோனா தடுப்பு பணிக்கான கூடுதல் வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் வாகனங்கள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-07-07 05:44 GMT   |   Update On 2020-07-07 06:14 GMT
கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு 50 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவின்போது கொரோனா தடுப்புப் பணிக்காக வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்புப் பணிக்காக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறைக்கு 50 துரித செயல் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
Tags:    

Similar News