செய்திகள்
பணியாளர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு முககவசம்

Published On 2020-07-06 14:57 GMT   |   Update On 2020-07-06 14:57 GMT
கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி நகரில் இயங்கி வரும் கிராமின் கூட்டா என்னும் தனியார் நிதிநிறுவன அமைப்பின் சார்பில் கொரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு முககவசம், சானிடைசர், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதன்படி தர்மபுரி நகராட்சி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அனைத்து போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார், மருத்துவர்கள் அனைவருக்கும் முககவசம் உள்ளிட்ட உபகரணங்களை மண்டல மேலாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.
Tags:    

Similar News