செய்திகள்
சூதாட்டம் கைது

ராயக்கோட்டை, கல்லாவியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2020-07-06 14:40 GMT   |   Update On 2020-07-06 14:40 GMT
ராயக்கோட்டை, கல்லாவியில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் நல்லூர் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 30), முனிராஜ்(38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர்.

கல்லாவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் செட்டிப்பள்ளி மாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மாதையன்(40), வெங்கடாசலம்(33), சுரேஷ்(27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News