செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் 3வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா : மாவட்டம் வாரியாக முழு விவரம்....

Published On 2020-07-06 13:21 GMT   |   Update On 2020-07-06 13:21 GMT
செங்கல்பட்டில் இன்று கொரோனாவுக்கு 213 பேரும், மதுரையில் 245 பேரும், திருவள்ளூரில் 175 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.   

சென்னையில் மேலும் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.                                                                                                                                                                                      
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் வாரியாக இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-

அரியலூர்         7     
செங்கல்பட்டு     213     
சென்னை         1,747     
கோயம்புத்தூர்     60     
கடலூர்         21     
தருமபுரி         12     
திண்டுக்கல்     24     
ஈரோடு         40     
கள்ளக்குறிச்சி     41     
காஞ்சிபுரம்     182     
கன்னியாகுமரி     78     
கரூர்         4    
கிருஷ்ணகிரி     15     
மதுரை         245     
நாகப்பட்டினம்     30     
நாமக்கல்         4     
நீலகிரி         26     
பெரம்பலூர்     2     
புதுக்கோட்டை     25     
ராமநாதபுரம்     69     
ராணிப்பேட்டை     45     
சேலம்         40     
சிவகங்கை     51     
தென்காசி         20     
தஞ்சாவூர்         7     
தேனி         119     
திருப்பத்தூர்     22     
திருவள்ளூர்     175     
திருவண்ணாமலை     37     
திருவாரூர்         14    
தூத்துக்குடி     109     
திருநெல்வேலி     84     
திருப்பூர்         16     
திருச்சி         32     
வேலூர்         49     
விழுப்புரம்     58     
விருதுநகர்     86     
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்     10
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)     3
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்     5     
மொத்தம்     3,783
Tags:    

Similar News